கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: அரசு மருத்துவ கல்லூரி மாணவரிடம் சிபிசிஐடி விசாரணை

கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: அரசு மருத்துவ கல்லூரி மாணவரிடம் சிபிசிஐடி விசாரணை
Updated on
1 min read

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவர் ஒருவர் கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்றமாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்துவரும் சிபிசிஐடி போலீஸார், உதித் சூர்யாவையும் அவரதுதந்தையையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நீட் தேர்வில் மேலும் பலர் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தொடர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பிரவீன், சரவணன்,இர்ஃபான் ஆகிய 3 மாணவர்களும் தந்தையுடன் கைது செய்யப்பட்டனர். மேலும் பூந்தமல்லியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவி, அவரது தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டுபிஹாரில் நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துசென்னை மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் சேர்ந்திருப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ஒரு புகார் வந்துள்ளது.

அதன்பேரில் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் நடத்தியவிசாரணையில், சம்பந்தப்பட்ட மாணவரின் புகைப்படமும், அவரதுசான்றிதழ்களில் இருந்த புகைப்படங்களும் மாறுபட்டு இருப்பதாக கூறப்படு கிறது.

அந்த மாணவர் குறித்த தகவல்களை சிபிசிஐடி போலீஸாருக்கு சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்தமாணவர் முதலாண்டு எம்பிபிஎஸ்தேர்வுகள் எதிலும் தேர்ச்சி பெறவில்லை என்றும் மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த மாணவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in