15 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்தன: நாங்குநேரியில் அதிமுக வெற்றிமுகம்

15 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்தன: நாங்குநேரியில் அதிமுக வெற்றிமுகம்
Updated on
1 min read

நாங்குநேரி

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிமுகத்துடன் முன்னேறி வருகிறது. 15-வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன், 21,791 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த அக்.21-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் சார்பில் ராஜநாராயணன் ஆகியோர் களம் கண்டனர்.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மொத்தம் 22 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதுவரை 15 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது.

15-வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் 68,517 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 46,726 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 21,791 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in