விபத்துகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், சமீபத்தில் வெவ்வேறு விபத்துகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நாகை, மதுரை, திருவண்ணாமலை, தருமபுரி, திருவள்ளூர், திருச்சி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், சிவகங்கை, தஞ்சாவூர், திண்டுக்கல், திருவாரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் பல்வேறு விபத்துகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (அக்.19) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in