

சென்னை
தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.1,580 கோடியில் 2,213 புதிய பிஎஸ்-6 தரத்தில் நவீன ரக பேருந்துகள், 500 மின் சார பேருந்துகள் வாங்க ஜெர்மன் வளர்ச்சி வங்கியுடன் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத் தானது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக் கும் வகையிலும், காற்று மாசுபடுவதை குறைக்கவும், மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத் துள்ளது. இதன் அடிப்படையில் லண் டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சி-40 என்ற பன்னாட்டு முகமைக்கும், தமிழக அரசு போக்குவரத்துத் துறைக்கும் கடந்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆலோசகர்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் வழிகாட்டுதல்படி தமிழகத் தில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதன் முன்னோட்டமாக கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வரலாற்றில் முதல்முறையாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கான முதல் மின்சார பேருந்தை, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
முன்னதாக கடந்த 2019-20-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடனுதவியுடன், ரூ.5,890 கோடியில் 12 ஆயிரம் புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகள், 2 ஆயிரம் மின்சார பேருந்துகளை வாங்கிப் பயன் படுத்தும் புதிய திட்டம் குறித்து அறிவிக் கப்பட்டது.
முதல் கட்டமாக...
இதை செயல்படுத்தும் நோக்கில் முதல்கட்டமாக ரூ.1,580 கோடி மதிப்பில் பிஎஸ்-6 தரத்திலான 2,213 புதிய பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி இடையே திட்ட ஒப்பந்தம் முதல்வர் பழனிசாமி முன் னிலையில் நேற்று கையெழுத்தானது.
பயணிகள் தகவல் அமைப்பு
இந்த திட்ட ஒப்பந்தம் மூலம் மின்சார வாகனங்களுக்கான மின் ஏற்று (சார்ஜர்) கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், போக்குவரத்து துறை யின் செயல்பாட்டை மேம்படுத்த மென் பொருள் மற்றும் வன்பொருள் கொள் முதல் செய்தல், பயணிகள் தகவல் அமைப்பை நிறுவுதல், உலகத்தரத் திலான ஆலோசகர்களின் உதவிகளை பெறுதல், பணமில்லா பயணச்சீட்டு முறை போன்ற திட்டங்கள் செயல் படுத்தப்படும்.
ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சி யில் போக்குவரத்துத் துறை அமைச் சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் கே.சண்முகம், நிதித்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், போக்குவரத் துத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிதித்துறை சிறப்பு செயலர் பூஜா குல் கர்னி, சென்னையில் உள்ள ஜெர்மன் துணை தூதர் காரின் ஸ்டோல், டெல்லி யில் உள்ள ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் துணை இயக்குநர் கிறிஸ்டன் ஸச்மிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.