ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பரத் திருமணம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆகம விதிமீறலா?- தமிழக அரசு தலையிட்டு கோயிலை நிர்வகிக்க கோரிக்கை

மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சித்சபை.
மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சித்சபை.
Updated on
2 min read

க.ரமேஷ்

கடலூர்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த 11-ம் தேதி வெகு விமரிசையாக சிவகாசி பட்டாசு தொழிலதிபர் இல்லத் திருமணம் நடைபெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோயிலின் ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளன என்று பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பக்தர்களும் அதிருப்தி அடைந்துள் ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் உலக பிரசித்தி பெற்ற சைவ திருத்தலமாகும். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடப்பெற்ற திருத்தலம் இது.

பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலம்; இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பாகவே தோற்றம் பெற் றது என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் ‘ராஜ சபை' என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் ஆனித் திருமஞ்சனம் நடைபெறும். மார்கழி மாதத்தில் இங்கு நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜர் - சிவகாம சுந்தரி அம்பாள் எழுந்தருள்வர். மேலும், இங்கு அவ்வப்போது ஆன் மிக நிகழ்வுகளும் நடைபெறுவது உண்டு.

புகழ்பெற்ற இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் ஆகம விதிப்படி திருமணம் உள்ளிட்ட வேறெந்த நிகழ்வுகளையும் அனுமதிப்ப தில்லை. இக்கோயிலில் உள்ள பாண்டிய நாயகர் (முருகன் கோயில்) சந்நிதியில்தான் திரு மணம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 11-ம் தேதி சிவகாசி பட்டாசு தொழிலதி பர் இல்லத் திருமண விழா ஆயி ரங்கால் மண்டபத்தில் நடந்துள்ளது.

இதற்காக மின் விளக்குகள், மலர் தோரணங்கள், வண்ண சீலைகள் ஆகியவற்றால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு ஆயிரங்கால் மண்டபம் நட்சத்திர விடுதிபோல ஜொலித்தது. திருமணத்தை ஒட்டி கோயில் நுழைவு வாயில், நடராஜர் வீற்றிருக்கும் சித்சபை ஆகிய இடங்களில் பூ, மின் ஒளி விளக்குகளால் அலங்காரம் செய் யப்பட்டிருந்தது.

திருமணம் நடந்த நாளன்று இப்பகுதியில் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருமண பேட்ஜ் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆகம விதியை மீறி இந்த ஆடம் பரத் திருமணம் இங்கு நடந்ததாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

பெரிய புராணம் அரங்கேறிய இடம்

இது குறித்து இந்து ஆலய பாது காப்பு குழு தலைவர் செங்குட்டுவன் கூறுகையில், "சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதி, அரங்கேற்றிய இடம் ஆயிரங்கால் மண்டபம். நீண்ட நெடுங்காலமாக ஆன்மிக நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்த இடத் தில் தீட்சிதர்கள் திருமணத்துக்கு அனுமதி கொடுத்தது கண்டிக்கத் தக்கது. இரவு 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இதன் பிறகு வெளியாட்கள் உள்ளே செல்ல முடியாது. இந்த நிலையில் இரவு முழுவதும் சித்சபையில் வெளி யாட்கள் பூ அலங்காரம் செய்து விட்டு அங்கேயே படுத்து உறங்கி உள்ளனர். திருமணத்தின்போது பலர் செருப்பு போட்டுக் கொண்டு ஆயிரங்கால் மண்டத்தில் சென் றுள்ளனர்'' என்றார்.

இதுகுறித்து தமிழ் வழிபாட்டு உரிமை பாதுகாப்பு குழு தலைவர் பாலசுப்ரமணியம் கூறுகையில், "ஆயிரங்கால் மண்டபத்தை தீட்சி தர்கள் தங்கள் குடும்ப நிகழ்ச்சிக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது தொழிலதிபருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர். ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் உள்ளிட்ட விழாக்களை நடத்துவது தவறு. அப்படி நடத்தும் பட்சத்தில் ஏழை, பணக்காரர்கள் என்று இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் தீட்சிதர்கள் ஆயிரங்கால் மண்ட பத்தை வாடகைக்கு தர வேண் டும்'' என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், சிதம்பரம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான பாலகிருஷ்ணன் இதுபற்றி கூறுகையில், ''சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் அநியாயங்களை சொல்லி மாளாது. கோயில் வரு மானத்தை தீட்சிதர்கள் கணக்கு காட்டுவதில்லை. வரலாற்றில் எப்போதும் இல்லாத விதமாய் தற்போது ஆயிரங்கால் மண்ட பத்தில் வசதி படைத்தவர்களின் குடும்பத் திருமணத்தை நடந்த அனுமதித்துள்ளனர்.

இதற்கு எந்த ஆகமவிதி அனுமதி கொடுத்தது? எந்த தீர்ப்பு இடம் கொடுத்தது?

தனிச் சட்டம் இயற்றுங்கள்

வடக்கே காசி விஸ்வநாதர் கோயிலை அரசு நிர்வகிக்கத் தேவையில்லை என்று நீதிமன்ற தீர்ப்பு வந்தது. ஆனால் அந்த மாநில அரசு, அதன்பிறகு தனிச்சட்டம் இயற்றி கோயிலை நிர்வகித்து வருகிறது. அதுபோல தமிழக அரசு இதில் தலையிட்டு இந்தக் கோயிலை நிர்வகிக்க வேண்டும். கோயில் என்பதோடு மட்டுமல்லா மல் வரலாற்று ஆய்வுக்கான பொக்கிஷமாக உள்ள இடத்தில் ஏற்கெனவே உள்ள ஒரு முறையை மீற அனுமதிக்க முடியாது'' என்றார்.

இதுபற்றி சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் பாலகணேச தீட்சிதரிடம் கேட்டதற்கு, எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றார். திருமண ஏற்பாடுகளை செய்த பட்டு தீட்சிதர் கூறுகையில், ‘‘கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த திருமணத்தில் எந்தவிதமான ஆகம விதி மீறல்களும் நடக்கவில்லை'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in