

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில் நேற்று வரை 47,943 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக் கான பொது கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடை பெற்று வருகிறது. 13-வது நாளான நேற்றைய கலந்தாய்வுக்கு 5,274 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 1,535 பேர் வரவில்லை. கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரியை தேர்வுசெய்த மற்றவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. கடந்த 13 நாட்களில் 47,943 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.