கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம்: சோகத்தில் மூழ்கிய எழுமலை கிராமம்

கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம்: சோகத்தில் மூழ்கிய எழுமலை கிராமம்
Updated on
1 min read

மதுரை,

உசிலம்பட்டி அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் இடையேயும் கிராம மக்கள் மத்தியிலும் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வாழ்விலும், மரணத்திலும் இணைபிரியாத தம்பதி என அவர்களை ஊரார் போற்றி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்தவர் சதாசிவம். பொது நூலகத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு சுதாகர், பாஸ்கர், பிரபாகர் என்று 3 மகன்கள் உள்ளனர்.

மூவரும் புதுச்சேரி உட்பட வெளியூர்களில் பணிபுரிகின்றனர். சதாசிவமும், அவரது மனைவியும் எழுமலையில் வசித்துவந்தனர்.

உடல் நலக் குறைவு காரணமாக நேற்று(புதன்கிழமை) சதாசிவம் உயிரிழந்தார். வெளியூர்களில் இருக்கும் மகன்கள் வந்தபின், அவரது உடலை அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், கணவர் இழந்த சோகத்தில் அழுது தவித்த, சரோஜாவுக்கு இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அவரும் உடல்நலம் குன்றியிருந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்னரே சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

கணவரை இழந்த வேதனையில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் இடையேயும் கிராம மக்கள் மத்தியிலும் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்விலும், மரணத்திலும் இணை பிரியாத தம்பதி என சதாசிவம் - சரோஜா இணையை உறவினர்களும் ஊராரும் போற்றி வருகின்றனர். வாழும்போதும் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து முன்னுதாரணமாகத் திகழ்ந்தனர் என்று ஊர் மக்களும், உறவினர்களும் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in