ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட 25 தமிழக மீனவர்கள் மீட்பு 

ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட 25 தமிழக மீனவர்கள் மீட்பு 
Updated on
1 min read

சென்னை 

ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட 25 தமிழக மீனவர்கள் மீட்கப் பட்டனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அருள் மொழி, வேளாங்கண்ணி, திலீப் குமார், கோபிநாத் ஆகியோருக்குச் சொந்தமான 4 விசைப்படகுகளில் 25 மீனவர்கள் கடந்த மாதம் 16-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். ஆந்திர மாநிலம் நெல் லூர் அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியில் மீன்பிடித்துக் கொண் டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்களை சிறைபிடித்தனர். மேலும், அரு கில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு கொண் டிருந்த காரைக்கால் மீனவர்களை யும் சிறைபிடிக்க திலீப்குமாரின் படகில் ஆந்திர மீனவர்கள் சென் றனர். ஆனால், அவர்கள் தப்பிச் சென்று விட்டனர். அப்போது, திலீப் குமாரின் படகு சேதமடைந்தது.

இதனால், திலீப்குமார் பட கில் இருந்தவர்களை மட்டும் விட்டு விட்டு மற்ற 3 படகு மற்றும் அதில் இருந்த 25 தமிழக மீனவர்களை யும் சிறை பிடித்துச் சென்றனர். தகவலறிந்ததும் சிறைபிடிக்கப் பட்ட மீனவர்களை மீட்க தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் ஆந்திராவுக்குச் சென்று மீனவர் கள் மற்றும் அம்மாநில மீன்வளத் துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மீனவர்கள் விடுவிக்கப் பட்டனர். இதன்படி, நேற்று முன் தினம் இரவு 3 படகுகளில் 25 தமிழக மீனவர்களும் சென்னை காசிமேடு வந்து சேர்ந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in