கீழடியில் செங்கலால் ஆன தரைத்தளம் கண்டுபிடிப்பு

கீழடியில் செங்கலால் ஆன தரைத்தளம் கண்டுபிடிப்பு
Updated on
1 min read

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் செங்கலால் ஆன தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டது.

கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல்துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது.

தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வு தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெறுகிறது.

இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் அதிகளவில் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி கிடைத்தன.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதி என்பவரது நிலத்தில் செங்கலால் ஆன தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் அக்காலத்தில் தரைத்தளம் செங்கலால் அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in