அரசு நிலத்தை அபகரித்ததாக வழக்கு; மா.சுப்பிரமணியனுக்கு சிபிசிஐடி சம்மன்: நாளை நேரில் ஆஜராக உத்தரவு

அரசு நிலத்தை அபகரித்ததாக வழக்கு; மா.சுப்பிரமணியனுக்கு சிபிசிஐடி சம்மன்: நாளை நேரில் ஆஜராக உத்தரவு
Updated on
1 min read

சென்னை

அரசு நிலத்தை அபகரித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏவும் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவியை நாளை ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை, திமுக எம்எல்ஏவும், முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான மா.சுப்பிரமணியன், தனது மனைவி காஞ்சனா பெயருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக மாற்றியுள்ளதாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.பார்த்திபன் சிபிசிஐடி போலீஸாரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவருக்கும் உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நாளை (ஜூலை 25) நேரில் ஆஜராகுமாறு மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in