கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு: ஆசிரியர் கல்வியியல் பல்கலை. உத்தரவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கல்வியியல் கல்லூரிகளில் படிக் கும் மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக பதிவாளர் (பொறுப்பு) வை.பாலகிருஷ்ணன், அனைத்து தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் செயலர்கள் மற் றும் முதல்வர்களுக்கு அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை உறுதிசெய்யும் பொருட்டு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு கருவி பொருத்தாத கல்லூரிகள் உடனடி யாக அந்த சாதனத்தை பொருத்த வேண்டும்.

கல்லூரிகள் பயோ- மெட்ரிக் கருவியின் வாயிலாக பதிவுசெய்யப்படும் வருகைப் பதிவு விவரத்தை வாரம் ஒருமுறை கல்லூரியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன் சில் (என்சிடிஇ) விதிப்படி பராமரிக் கப்பட வேண்டிய பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண் டும்.

கல்லூரிகள் மீது எவ்வித புகார் களும் எழாத வண்ணம் சீரிய முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in