

மாசடைந்த குடிநீரை குடித்ததால் மயக்கமடைந்த 55 சட்டக் கல்லூரி மாணவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பெற்றனர்.
புரசைவாக்கத்தில் உள்ள சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் நேற்று உணவு சாப்பிட்டுவிட்டு குடிநீர் குடித்த 56 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர். அதில் இரண்டு பேருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. 54 மாணவர்கள் புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்றுச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து விடுதியில் உள்ள தண்ணீர்த் தொட்டி யில் நாய் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, “நாய் எப்படி இறந்து கிடந்தது என்று தெரியவில்லை. நாயின் உடல் அழுகிய நிலையிலோ, உப்பிய நிலையிலோ காணப்படவில்லை. இந்த விஷயத்தில் மாணவர்கள் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் செயல்படுவதாக தெரிகிறது. இது குறித்து மேலும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.