Published : 19 Jul 2015 10:43 AM
Last Updated : 19 Jul 2015 10:43 AM
காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தமிழக காவல் துறையில் காலியாக இருக்கும் 1,078 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விண்ணப்பித்த அனைவரும் எழுத்து தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். கடந்த மே மாதம் 23, 24-ம் தேதிகளில் இதற்கான எழுத்து தேர்வு நடந்தது.
இந்நிலையில் தேர்வு முடிவு கள் www.tnusrbexams.net என்ற இணையதளத்தில் நேற்று வெளி யிடப்பட்டன. கட்-ஆப் மதிப்பெண் மற்றும் அடுத்தக்கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டோர் விவரமும் அதில் வெளியிடப்பட்டுள்ளன.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 3 மற்றும் 5-ம் தேதிகளில் உடல் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 15 இடங்களில் இந்த தேர்வு நடைபெறும். இதிலும் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT