பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
Updated on
1 min read

கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி பாசன அமைப்பின் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, 16.6.2015 முதல் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், நாங்குனேரி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டங்களிலுள்ள 37,435 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in