10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு

10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு
Updated on
1 min read

10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இணையதளத்தில் நாளை (திங்கள்கிழமை) வெளியிடப் படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் கே.தேவரா ஜன், நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த மார்ச், ஏப்ரல் மாதத் தில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி தேர்வை 11 லட்சத்து 15 ஆயிரத்து 906 பேர் எழுதியிருந்தனர். அவர்களில் 20 ஆயிரத்து 439 பேர் மறுகூட்டல் செய்ய வேண்டி விண்ணப்பித்திருந்தனர். இதில் 668 பேருக்கு மதிப்பெண்ணில் மாற்றம் வந்துள்ளது.

அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.tndge.in) நாளை (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இந்த பட்டியலில் இல்லாத பதிவெண்களுக் கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் 30-ம் தேதி பிற்பகல் முதல் >www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் பதி வெண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை குறிப்பிட்டு திருத்தப் பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in