5 ஆண்டுகளில் 4,192 கோயில்களுக்கு குடமுழுக்கு: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

5 ஆண்டுகளில் 4,192 கோயில்களுக்கு குடமுழுக்கு: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் கடந்த 5 ஆண்டு கால ஆட்​சி​யில் 4,192 கோயில்​களுக்கு குட​முழுக்கு நடத்​தப்​பட்​டுள்​ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் கேள்வி நேரத்​தின்​போது நேற்று மடத்​துக்​குளம் தொகுதி எம்​எல்ஏ சி.மகேந்​திரன் பேசும்​போது, “உடுமலைப்​பேட்​டை, பிரசன்ன விநாயகர் கோயில் மிக முக்​கிய​மான கோயி​லாகும். அதற்கு குட​முழுக்கு நடத்த வேண்​டும். அதே​போல மடத்​துக்​குளம் தொகு​திக்​குட்​பட்ட ஆத்​தோரம் வெங்​கட்​ரமண சுவாமி கோயில் புனரமைப்பு பணி​களுக்கு தேவை​யான நிதி​யினை ஒதுக்கி விரை​வில் கும்​பாபிஷேகம் செய்து கொடுக்க வேண்​டும்” என்று அவர் கோரிக்கை விடுத்​தார்.

இதற்கு இந்து சமய அறநிலையத்​துறை அமைச்​சர் பி.கே.சேகர் பாபு அளித்த பதிலில் கூறியதாவது: பிரசன்ன விநாயகர் திருக்​கோ​யில், அழகு​நாச்​சி​யம்​மன் கோயில் உள்​ளிட்ட 3 கோயில்​களுக்​கும் நிதியை ஒதுக்கி ஏற்​கெனவே நடை​பெற்று வரும் திருப்​பணி​களை விரைவுப்​படுத்தி விரை​வில் குட​முழுக்கு நடை​பெறும்.

குட​முழுக்கு நடை​பெறுமா என உறுப்பினர் கேள்வி எழுப்​பி​யுள்​ளார். இந்த ஆட்சி அமைந்த பிறகு இது​வரை 4,192 திருக்​கோ​யில்​களுக்கு குட​முழுக்கு நடத்தி இருக்​கிறோம். அதோடு மட்​டுமல்​லாமல் இந்த மாதத்​தில் மட்​டும் கூடு​தலாக நடை​பெறவுள்ள திருக்​கோ​யில்​களின் எண்​ணிக்கை 130 ஆகும். அதையும் சேர்த்து கணக்​கிட்​டால் இந்த மாத இறு​திக்​குள் 4,322 திருக்​கோ​யில்​களுக்கு குட​முழுக்கு நடத்தி முடிக்​கப்​படும்.

மக்​களோடு இறைவனை​யும், மகிழ்ச்​சி​யோடு வைத்​துக் கொண்​டிருக்​கும் ஆட்சி இது என்​பதை தெரி​வித்​துக்​கொள்​கிறேன். இவ்​வாறு அவர்​ பதில்​ அளித்​தார்​.

5 ஆண்டுகளில் 4,192 கோயில்களுக்கு குடமுழுக்கு: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
பதிவுப் பட்டியலில் இருந்து தமமுக, மமக உள்ளிட்ட கட்சிகளை நீக்கிய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் ஆணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in