

புதுச்சேரியில் கடந்த 9 மாதங்களாக ரேஷன் அட்டைகளுக்கு இலவச அரிசி வழங்கப்படவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் விஸ்வநாதன் கூறுகையில், ''புதுச்சேரியில் கல்வி, மருத்துவத்தின் மோசமான நிலையில் உள்ளது. கல்வியின் தரத்தை மேம்படுத்த புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் கடந்த 9 மாதங்களாக ரேஷன் அட்டைகளுக்கு இலவச அரிசி வழங்கப்படவில்லை'' என்று கூறியுள்ளார்.