ரூ.1,200 கோடிக்கு பிணைய பத்திரம் ஏலம்

ரூ.1,200 கோடிக்கு பிணைய பத்திரம் ஏலம்

Published on

ரூ.1,200 கோடி மதிப்புள்ள 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலர் க.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பங்கு வடிவிலான ரூ.1,200 கோடி மதிப்புள்ள 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏலம் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் வரும் 13-ம் தேதி நடத்தப்படும்.

போட்டி ஏலக் கேட்புகளை காலை 10.30 முதல் பகல்12 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகளை காலை 10.30 முதல் 11.30 மணிக்குள்ளாகவும் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் 13-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in