எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்: டிச.15 வரை 4 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது நீட்டிப்பு

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்: டிச.15 வரை 4 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: எழும்​பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறு​வ​தால், ராமேசுவரம், தஞ்சாவூர், கொல்​லம் உட்பட 4 விரைவு ரயில்கள் தாம்​பரத்​தில் இருந்து இயக்​கு​வது டிச.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்​து தெற்கு ரயில்வே வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் நடை​பெற்று வரும் மறுசீரமைப்பு பணி​கள் காரண​மாக, விரைவு ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன. அதன்​படி, சில ரயில்கள் தாம்​பரம், கடற்​கரை​யில் இருந்து தற்​காலிக​மாக இயக்​கப்​படு​கின்​றன.

இதற்​கிடையே, பணி​கள் இன்​னும் முடி​யாத நிலை​யில், சில ரயில்கள் தாம்​பரத்​தில் இருந்து இயக்​கு​வது நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​படி, தஞ்சாவூர் - சென்னை உழவன் விரைவு ரயில்​(16866), கேரள மாநிலம் கொல்​லம் – எழும்​பூர் அனந்​த​புரி விரைவு ரயில் (20636) இன்று (5-ம் தேதி) முதல் டிச.14-ம் தேதி வரையிலும் தாம்​பரம் வரை இயக்​கப்​படும் இது​போல, ராமேசுவரம் – சென்னை எழும்​பூர் சேது விரைவு ரயில் (22662), ராமேசுவரம் – எழும்பூர் விரைவு ரயில் (16752) இன்று (5-ம் தேதி) முதல் டிச.14-ம் தேதி வரையிலும் தாம்​பரம் வரை இயக்​கப்​படும்.

இதே​போல, மேற்​கண்ட 4 விரைவு ரயில்​களும் டிச.6-ம் தேதி முதல் டிச.15-ம் தேதி வரை​யில், சென்னை எழும்​பூருக்கு பதிலாக தாம்​பரத்​தில் இருந்து இயக்​கப்​படும். இதுத​விர, சென்னை எழும்​பூர் – மும்பை சிஎஸ்​டி விரைவு ரயில் (22158) நாளை (6-ம் தேதி) முதல் டிச.15-ம் தேதி வரை சென்னை கடற்​கரை​யில் இருந்து இயக்​கப்​படும்.

குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத் – திருச்​சிக்கு வியாழன் தோறும் இயக்​கப்​படும் வாராந்​திர விரைவு ரயில் (09419) டிச.11-ம் தேதி அன்று காட்​பாடி, வேலூர், விழுப்​புரம் என மாற்​றுப் பாதை​யில் செல்வ​தால், எழும்​பூர், தாம்​பரம், செங்​கல்​பட்​டுக்கு செல்லாது.

மறுமார்க்கத்தில் திருச்சி - அகமதா​பாத்​துக்கு டிச.7, 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில் (09420), வேலூர், காட்​பாடி, மேல்​பாக்​கம், திருத்​தணி வழி​யாக திருப்பி விடப்​படு​வ​தால், செங்​கல்​பட்​டு, தாம்​பரம், சென்னை எழும்​பூர், பெரம்​பூர், அரக்​கோணத்​துக்கு செல்​லாது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்: டிச.15 வரை 4 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது நீட்டிப்பு
புழல் மகளிர் சிறையில் கைதிகள் இடையே மோதல்: திருநங்கை மீது வழக்கு பதிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in