புழல் மகளிர் சிறையில் கைதிகள் இடையே மோதல்: திருநங்கை மீது வழக்கு பதிவு

புழல் மகளிர் சிறையில் கைதிகள் இடையே மோதல்: திருநங்கை மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

சென்னை: புழல் மகளிர் சிறையில் கைதிகள் மோதிக் கொண்ட விவகாரத்தில் திருநங்கை மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் பெண் கைதிகளை அடைக்க தனிச் சிறை உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் பெண்கள் இந்த சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையின் 6-வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள திருநங்கை அபி என்ற ராஜேஷுக்கும் (36), வின்சி லவ்லி (27), மஞ்சு (26) ஆகிய கைதிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியுள்ளது.

தண்ணீர் பிடிக்கும் குவளையால் திருநங்கை அபி தாக்கியதில், வின்சி, மஞ்சு ஆகிய 2 பேருக்கும் ரத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் சிறைத் துறை அதிகாரிகள் புகார் கொடுத்தனர். அதன்பேரில், திருநங்கை அபி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புழல் மகளிர் சிறையில் கைதிகள் இடையே மோதல்: திருநங்கை மீது வழக்கு பதிவு
அதிக குளிரால் முதியோருக்கு முகவாதம் ஏற்பட வாய்ப்பு: அரசு மருத்துவர் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in