Published : 14 Mar 2015 04:35 PM
Last Updated : 14 Mar 2015 04:35 PM
சென்னை மண்டலத்தில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மத்திய அரசு பள்ளிகளில் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கேந்திரிய பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும். 6-வது ஊதியக்குழு பரிந்துரையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல விஷயங்கள் வலியுறுத்தப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT