பணியாரம் வாங்கிச் சாப்பிட்ட 30 பள்ளிக் குழந்தைகள் மயக்கம்

பணியாரம் வாங்கிச் சாப்பிட்ட 30 பள்ளிக் குழந்தைகள் மயக்கம்
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சின்னமுலையூரை சேர்ந் தவர் வெள்ளையம்மாள் (70). இவர் அப்பகுதியில் பணியாரக் கடை வைத்துள்ளார். நேற்று காலையும் வெள்ளையம்மாளிடம், பெற்றோர் சிலர் பணியாரம் வாங்கி குழந்தை களுக்கு கொடுத்துள்ளனர். குழந்தைகளும் அவற்றை சாப்பிட்டுவிட்டு, வீட்டில் இருந்து பள்ளிக்கு வழக்கம்போல் புறப்பட்டுள்ளனர். அப்போது, 2 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அடுத்தடுத்து வாந்தி எடுத்தனர். சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது இதுபற்றி காரணம் தெரியாமல் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அங்கு விரைந்து சென்று வாந்தி, மயக்கமடைந்த 30 பேரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை யில், வெள்ளையம்மாளிடம் பணி யாரம் வாங்கி சாப்பிட்ட குழந்தை கள், பெரியவர்கள் மட்டுமே வாந்தி எடுத்தனர். அவரிடம் விசாரித்தபோது, பணியாரத் தில் தெரியாமல் பல்லி விழுந்த தும், அதை சாப்பிட்டதால் குழந்தைகள், பெண்கள் வாந்தி எடுத்ததும் தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in