சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமித்திருந்த 31 ஏக்கர் நிலம் மீட்பு: நீதிமன்ற உத்தரவின்பேரில் நடவடிக்கை

சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமித்திருந்த 31 ஏக்கர் நிலம் மீட்பு: நீதிமன்ற உத்தரவின்பேரில் நடவடிக்கை
Updated on
1 min read

தஞ்சாவூர்: சாஸ்த்ரா பல்​கலைக்​கழகத்​தால் ஆக்​கிரமிப்பு செய்​யப்​பட்​டிருந்த 31 ஏக்​கர் அரசு நிலத்தை உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​படி வரு​வாய்த் துறை​யினர் நேற்​று மீட்​டு, அறி​விப்​புப் பலகையை வைத்​தனர்.

தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​மலைச​முத்​திரத்​தில் திறந்​தவெளி சிறைச்​சாலை அமைக்க ஒதுக்​கப்​பட்​டிருந்த 31 ஏக்​கர் புஞ்சை தரிசு நிலத்​தை, சாஸ்த்ரா பல்​கலைக்​கழகம் ஆக்​கிரமிப்பு செய்​து, அந்த நிலத்​தில் பெரிய அளவில் கட்​டிடங்​கள் கட்​டி, வகுப்​பு​களை நடத்தி வரு​வ​தாக புகார்​கள் எழுந்​தன. இது தொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடரப்​பட்​டது.

இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், சாஸ்த்ரா பல்​கலைக்​கழகத்​தால் ஆக்​கிரமிப்பு செய்​யப்​பட்ட நிலத்தை வரு​வாய்த் துறை மீட்க வேண்​டும் என்று நேற்று முன்​தினம் உத்​தர​விட்​டது. இதையடுத்​து, கோட்​டாட்​சி​யர் நித்​யா, வட்​டாட்​சி​யர் சிவக்​கு​மார் தலை​மையி​லான வரு​வாய்த் துறை​யினர் நேற்று அங்கு சென்​று, ஆக்​கிரமிக்​கப்​பட்​டிருந்த நிலத்தை வரு​வாய் துறை​யின் கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்​டு​வந்​தனர். மேலும், “இது அரசு நிலம், அத்​து​மீறி நுழைபவர்​கள் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்ற அறி​விப்பு பலகையை வைத்​தனர்​.

பின்னர், மீட்கப்பட்ட நிலத்தை சிறைத் துறை அதிகாரிகளிடம், கோட்டாட்சியர் ஒப்படைத்தார். தொடர்ந்து, சிறைத் துறை அதிகாரிகள் அந்த இடத்தில் திறந்தவெளி சிறை அமைப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை நேற்று மாலை அங்கு நடத்தினர்.

சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமித்திருந்த 31 ஏக்கர் நிலம் மீட்பு: நீதிமன்ற உத்தரவின்பேரில் நடவடிக்கை
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: திமுக பிரமுகர் உட்பட 15 பேர் மீது வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in