இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 30 பேர் சென்னை வந்தனர்

வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 30 பேர் சென்னை வந்தனர்
Updated on
1 min read

சென்னை: இலங்கை சிறை​யில் இருந்து விடுவிக்​கப்​பட்ட ராமேசுவரம், காரைக்​கால் மீனவர்​கள் 30 பேர் சென்னை வந்​தனர். தமிழக மீன்​வளத்​துறை அதி​காரி​கள், அவர்​களை வரவேற்று அரசு ஏற்​பாடு செய்​திருந்த வாக​னங்​களில் சொந்த ஊர்​களுக்கு அனுப்பி வைத்​தனர்.

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி மாநிலங்​களை சேர்ந்த 30 மீனவர்​கள், கடந்த 2 மாதங்​களுக்கு முன்பு 3 விசைப்​படகு​களில் பாம்​பன் பகு​தி​யில் இருந்து மீன்​பிடிக்க கடலுக்குச் சென்​றனர். இவர்​களில் 21 மீனவர்​கள்,தமிழகத்​தின் ராமேசுவரம், 9 மீனவர்​கள் காரைக்​கால் பகு​தி​யைச் சேர்ந்​தவர்​கள்.

நடு​க்கடலில் மீன்பிடித்துக்கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த இலங்கை கடலோர காவல்படை​யினர் எல்லை தாண்டி மீன்பிடித்​த​தாக குற்​றம்சாட்​டி, 30 மீன

வர்​களை​யும் கைது செய்​தனர். அவர்​களின் விசைப்​படகு​கள், மீன்​பிடி வலைகள், பிடித்து வைத்​திருந்த மீன்​கள் ஆகிய​வற்​றை​யும் பறி​முதல் செய்​து, இலங்​கைக்கு கொண்டு சென்​றனர். அந்நாட்டு நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி 30 பேரை​யும் சிறை​யில் அடைத்​தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்,மீனவர்​களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்​திர மோடி, வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் ஆகியோ​ருக்கு கடிதம் எழு​தி​னார். இதையடுத்​து, இலங்​கை​யில் உள்ள இந்​திய தூதரக அதிகாரி​கள், இலங்கை அரசு அதி​காரி​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதை தொடர்ந்து, சில தினங்​களுக்கு முன்பு 30 மீனவர்​களை​யும் இலங்கை நீதி​மன்​றம் நிபந்னையுடன் விடு​தலை செய்​து உத்தரவிட்டது.

இதையடுத்து மீனவர்​களை இந்​தி​யா​வுக்கு அனுப்ப இலங்கை இந்​திய தூதரக அதிகாரி​கள் நடவடிக்கை எடுத்​தனர். அதன்​படி, நேற்று காலை இலங்கை தலைநகர் கொழும்​பு​வில் இருந்​து, இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானத்​தில் 30 மீனவர்​களும் சென்​னை அனுப்பி வைக்​கப்​பட்​டனர். சென்னை விமான நிலை​யத்​தில், தமிழக மீன்​வளத்​துறை அதி​காரி​கள், அவர்​களை வரவேற்​று, அரசு ஏற்​பாடு செய்து இருந்த வாக​னங்​களில் சொந்த ஊர்​களுக்கு அனுப்பி வைத்​தனர்.

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 30 பேர் சென்னை வந்தனர்
“அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக் கூடாது” - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in