அரசுக்கு ரூ. 1.20 கோடி இழப்பு: திமுக முன்னாள் பேரூராட்சி தலைவருக்கு 3 ஆண்டு சிறை

அரசுக்கு ரூ. 1.20 கோடி இழப்பு: திமுக முன்னாள் பேரூராட்சி தலைவருக்கு 3 ஆண்டு சிறை
Updated on
1 min read

திருநெல்வேலி: ​திருநெல்​வேலி மாவட்​டம் களக்​காடு பேரூ​ராட்​சி​யில் தனி​யார் நிறுவன மனை​களுக்கு அங்​கீ​காரம் அளித்​த​தில் அரசுக்கு ரூ.1.20 கோடி இழப்பு ஏற்​படுத்​தி​ய​தாக தொடரப்​பட்ட வழக்​கில், முன்​னாள் பேரூ​ராட்சித் தலை​வரும், திமுக ஒன்​றிய செய​லா​ள​ரு​மான பி.சி. ராஜனுக்கு 3 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து நீதி​மன்​றம் தீர்ப்பு அளித்​துள்​ளது.

களக்​காடு பேரூ​ராட்சி தலை​வ​ராக கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016 வரை பி.சி.​ராஜன் இருந்​தார். அப்​போது இவரும் செயல் அலு​வல​ராக இருந்த முத்​துக்​கு​மாரும் சேர்ந்​து, அப்​பகு​தி​யில் தனி​யாருக்கு 74 ஏக்​கரில் மனை​கள் அங்​கீ​காரம் (பிளாட் அப்​ரூவல்) செய்​த​தில், ரூ.1.20 கோடியை அரசுக்கு இழப்​பீடு ஏற்​படுத்​தி​யது கண்​டறியப்​பட்​டது.

இதுகுறித்​து, திருநெல்​வேலி லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார்வழக்கு பதிந்து திருநெல்​வேலி ஊழல் தடுப்பு நீதி​மன்​றத்​தில் விசாரணை நடந்து வந்தது. ​வழக்கை விசா​ரித்த நீதிபதி சுப்​பை​யா, பிளாட் அப்​ரூவல் கொடுத்த அப்​போதைய பேரூ​ராட்சித் தலை​வர் பி.சி.​ராஜன், முத்​துக்​கு​மாருக்​கு, தலா 3 ஆண்​டு சிறை தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தார்.

மேலும், இரு​வருக்​கும் தலா ரூ.31 ஆயிரம் அபராத​மும் விதிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வழக்​கில் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்ள பி.சி.​ராஜன் தற்​போது களக்​காடு நகராட்சி துணைத் தலை​வ​ராக​வும், களக்​காடு தி​முக ஒன்​றியச் செய​லா​ள​ராக​வும்​ பொறுப்​பில்​ உள்​ளார்​.

அரசுக்கு ரூ. 1.20 கோடி இழப்பு: திமுக முன்னாள் பேரூராட்சி தலைவருக்கு 3 ஆண்டு சிறை
“வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது” - அண்ணாமலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in