உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார்’ விருது: முதல்வர் வழங்கினார்

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் நாமக்கல் நல்லசிவம், புதுக்கோட்டை சுப்பிரமணியன், செங்கல்பட்டு சாதனா ஆகியோருக்கு ‘நம்மாழ்வார்’ விருதுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று வழங்கினார்.

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் நாமக்கல் நல்லசிவம், புதுக்கோட்டை சுப்பிரமணியன், செங்கல்பட்டு சாதனா ஆகியோருக்கு ‘நம்மாழ்வார்’ விருதுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று வழங்கினார்.

Updated on
1 min read

சென்னை: உ​யிர்ம வேளாண்​மை​யில் சிறப்​பாகச் செயல்​படும் 3 விவ​சா​யிகளுக்கு 2025-26-ம் ஆண்​டுக்​கான ‘நம்​மாழ்​வார்’ விருதுகளை முதல்​வர் விஜய் நேற்று வழங்​கி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: உயிர்ம வேளாண்​மை​யில் (Organic Farming) ஈடு​படும் விவ​சா​யிகளை ஊக்​கப்​படுத்​தும் வகை​யிலும், இத்​துறை​யில் நம்​மாழ்​வார் ஆற்​றிய பெரும் பங்​களிப்​பைச் சிறப்​பிக்​கும் வகை​யிலும், சிறந்த விவ​சா​யிகளுக்கு ஆண்​டு​தோறும் அவரது பெயரில் விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன.

அந்த வகை​யில் 2025-26-ம் ஆண்​டில் உயிர்ம வேளாண்​மை​யில் சிறந்து விளங்​கும் நாமக்​கல் செ.நல்​லசிவம், புதுக்​கோட்டை அ.சுப்​பிரமணி​யன், செங்​கல்​பட்டு சாதனா ஆகிய 3 விவ​சா​யிகளுக்கு தலா ரூ.2 லட்​சம் ரொக்​கப் பரிசு, பதக்​கத்​துடன் கூடிய நம்​மாழ்​வார் விருதுகளை சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் நேற்று வழங்​கி​னார். அமைச்​சர் வினோத், தலை​மைச் செயலர் சாய்​கு​மார். வேளாண் துறைச் செயலர் பொ.சங்​கர், இயக்​குநர் க.வீ.​முரளீதரன் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

நம்​மாழ்​வார் விரு​தாளர் செ.நல்​லசிவம் கடந்த 4 ஆண்​டு​களுக்​கும் மேலாக இயற்கை இடு​பொருட்​களைக் கொண்டு சோளம், கரும்​பு, மா, தென்னை, காய்​கறிகளை உற்​பத்தி செய்​தும், இயற்கை வேளாண் பொருட்​களை மதிப்பு கூட்டி விற்​பனை செய்​தும் வரு​கி​றார். 2,000-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகளுக்கு பயிற்சி வழங்​கி​யுள்​ளார்.

அ.சுப்​பிரமணி​யன் கடந்த 10 ஆண்​டு​களாக உயிர்ம வேளாண்மை முறை​யில் நெல் வகை​கள், நிலக்​கடலை, குறுமிளகு, தென்​னை, வால்​நட் போன்​றவற்றை சாகுபடி செய்​ததுடன், மதிப்பு கூட்டி விற்​பனை​யும் செய்து வரு​கி​றார். மதிப்பு கூட்​டு​தல் குறித்து 675 விவ​சா​யிகளுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தி​யுள்​ளார்.

சாதனா கடந்த 11 ஆண்​டு​களாக உயிர்ம வேளாண்மை முறை​யில் கம்​பு, கேழ்​வரகு, உளுந்​து, நிலக்​கடலை, பச்​சைப்​ப​யிறு, வாழை, தென்​னை, மா, பலா, கீரை வகை​கள் போன்​றவற்றை சாகுபடி செய்து வரு​வதுடன், சிறு​தானி​யம், எண்​ணெய் வகை​கள் போன்​றவற்றை மதிப்பு கூட்​டி​யும் விற்​பனை செய்து வரு​கி​றார். 470-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகளுக்கு பயிற்சி வழங்​கி​யுள்​ளார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் நாமக்கல் நல்லசிவம், புதுக்கோட்டை சுப்பிரமணியன், செங்கல்பட்டு சாதனா ஆகியோருக்கு ‘நம்மாழ்வார்’ விருதுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று வழங்கினார். </p></div>
முதல்வர் விஜய் உத்தரவின்படி நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க 4 அமைச்சர்கள் டெல்லி விரைந்தனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in