நாடாளுமன்ற வளாகத்தில் காமராசர் பிறந்தநாள் கொண்டாட்டம்: எம்.பி. வசந்தகுமார்

நாடாளுமன்ற வளாகத்தில் காமராசர் பிறந்தநாள் கொண்டாட்டம்: எம்.பி. வசந்தகுமார்
Updated on
1 min read

காமராசரின் 117-வது பிறந்தநாளை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலை முன்பு கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாக கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''காமராசரின் 117-வது பிறந்தநாளை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலை முன்பு கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம். லாபி 2-ல் இருக்கும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்த உள்ளோம். இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்த காமராசருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இந்த விழா நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கலந்துகொண்டு சிறப்பிப்பர். அதேபோல அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் இந்த விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது'' என்றார் வசந்தகுமார்.

1903-ம் ஆண்டு ஜூலை 15-ல் விருதுநகரில் காமராசர் பிறந்தார். 1936-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காமராசர் பொதுச்செயலர் ஆனார். 1937-ல் சென்னை மாகாண சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தது. விருதுநகரை உள்ளடக்கிய சாத்தூர் தொகுதியில் போட்டியின்றி காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தமிழகத் தலைவர் ஆன காமராசர், 1954-ல் தமிழக முதல்வராக 9 ஆண்டுகள் பதவிவகித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in