Published : 11 Jul 2019 03:45 PM
Last Updated : 11 Jul 2019 03:45 PM
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி கூடும் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கதிர் ஆனந்த் வீட்டில் மார்ச் 29, 30 தேதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. இதனால், மக்களவைத் தேர்தலின்போது, வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே வேலூர் தொகுதிக்கு மீண்டும் ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்பு அறிவித்தபடி, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என அதிமுக அறிவித்தது. திமுக வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் வேலூர் தேர்தல் குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி கூடும் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக க.அன்பழகன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் 15 ஆம் தேதி, திங்கட்கிழமை, மாலை 5 மணியளவில் சென்னை, தேனாம்பேட்டை, அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடைபெறும்", என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT