

வடசென்னை அனல்மின் நிலை யத்தில் கீழே தவறி விழுந்து ஒப்பந்த ஊழியர் பலியானார்.
அத்திப்பட்டு புதுநகரில் வசிக்கும் சுப்பிரமணி, வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை இரவு பணிக்குச் சென்ற அவர், தனது சீருடையை அணிவதற்காக சென்ற போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கிழே விழுந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து, மீஞ்சூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்த சுப்பிரமணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, மீஞ்சூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.