

இலங்கையில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 42 மீனவர்கள் மற்றும் 141 படகு களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜியிடம் வழங்கி யுள்ள கடிதத்தில் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று டெல்லிக்கு சென்றபோது, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தங்களது பாரம்பரிய பகுதியில், அமைதியான முறையில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுவரும் தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளை உங்களது கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன். 61 நாட்கள் நெடிய மீன்பிடித்தடை காலத்தை முடித்து தங்களது மீன்பிடிப்பினை மீண்டும் தொடங்கிய 31 மீனவர்கள் அவர்களது 6 மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மீனவர்களின் 141 மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளன. இதனால், தமிழக மீனவர்கள் இயல்பு வாழ்க்கையை சமாளித்திட இயலாத பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரதமர் மோடி சந்திப்பிற்கு பிறகு தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இது நாள்வரை இலங்கை அரசு படகுகளை விடுவிக்கவில்லை.
இப்பிரச்சினையில் நீங்கள் தலையிட்டு, தமிழக மீனவர்கள் மீது தொடரும் கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கும், இலங்கையில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 42 மீனவர்கள் மற்றும் 141 படகுகளை உடனடியாக விடுவித்திட நடிவடிக்கை எடுக்கவும் வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.