பாஸ்கரன் மீதான அந்நிய செலாவணி வழக்கு: அமலாக்கத் துறை அதிகாரியிடம் குறுக்கு விசாரணை

பாஸ்கரன் மீதான அந்நிய செலாவணி வழக்கு: அமலாக்கத் துறை அதிகாரியிடம் குறுக்கு விசாரணை
Updated on
1 min read

பாஸ்கரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

ஜெஜெ டிவிக்கு வெளிநாடுக ளில் இருந்து ஒளிபரப்பு கருவிகளை இறக்குமதி செய்ததில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட தாக வி.கே.சசிகலா மற்றும் சுதா கரன், பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவினர் 4 வழக்கு களை தனித்தனியாக கடந்த 1996-ல் பதிவு செய்தனர். இந்த வழக்குகளி்ன் விசாரணை சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜாகிர்ஹூசைன் முன்பாக நடந்து வருகிறது. இதில் வி.கே.சசிகலா உள்ளிட்ட அனைவர் மீதான குற்றச் சாட்டும் ஏற்கெனவே பதிவு செய்யப் பட்டது.

அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக விசா ரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பாஸ்கரன் மீதான வழக்கில் மட்டும் அரசு தரப்பு சாட்சியான அமலாக்கத் துறை அதிகாரி பாமா புவனேஸ்வரியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. மற்ற 3 வழக்குகளில் சாட்சி குறுக்கு விசாரணைக்காக வழக்கு விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in