

நடிகை அமலாபால் மற்றும் இயக்குநர் விஜய் ஆகியோருக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலாபால். கேரளாவை சேர்ந்த இவரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் விஜய்யும் காதலித் தனர். பின்னர், இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 12- ம்தேதி திருமணம் செய்தனர்.
திருமணமாகி சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணத் துக்குப் பின்னரும் அமலாபால் நடிப்பு தொழிலை தொடர்ந்து மேற் கொண்டதால், அதற்கு விஜய் யின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து விஜய்யும், அமலாபாலும் சுமுக மாக பிரிவது என்று முடிவு செய் தனர். அதன்படி, அவர்கள் சென்னை குடும்ப நல நீதி மன்றத் தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி பரஸ்பரம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு 2-வது கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதி இர்சான்பூங்குழலி முன்பு விசார ணைக்கு வந்த போது. விஜய் - அமலாபால் இருவரும் நேரில் ஆஜராகி, மனமொத்து பிரிவதாக கூறி பிரமாண பத்திரங்களை தனித் தனியாக தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.