சுற்றுலாக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது: மணப்பாடு படகு விபத்தில் பலி 10 ஆக உயர்வு- படகு உரிமையாளர், ஓட்டுநர் கைது

சுற்றுலாக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது: மணப்பாடு படகு விபத்தில் பலி 10 ஆக உயர்வு- படகு உரிமையாளர், ஓட்டுநர் கைது
Updated on
1 min read

திருச்செந்தூர் அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில், மேலும் ஒரு சிறுமியின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டதன் மூலம், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந் துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், அழகம் மன்புரம் முத்தாரம்மன் கோயில் விழாவுக்காக வெளியூர்களில் இருந்து வந்த 19 குழந்தைகள் உட்பட 42 பேர், நேற்று முன்தினம் மணப்பாடு கடற்கரை கிராமத்துக்கு சுற்றுலாச் சென்றனர். மாலை 6 மணியளவில் கடலில் சவாரி செய்ய கெவின் என்பவரது பைபர் படகை அவர்கள் வாடகை பேசினர். மணப்பாடு செல்வம் படகை ஓட்டினார். கரையில் இருந்து 25 மீட்டர் தொலைவுக்கு படகு சென்றபோது அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. படகில் இருந்த மீன்பிடி வலைகளில் சிக்கி வெளியே வர முடியாமல் பயணிகள் திணறினர்.

இவர்களது கூக்குரல் கேட்டு அப்பகுதி மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படகு ஓட்டுநரையும் சேர்த்து 22 பேர் நீந்தி தப்பினர். 11 பேர் மீட்கப்பட்டு திருச்செந்தூர், திருநெல்வேலி மருத் துவமனைகளில் அனுமதிக்கப் பட்டனர். 5 பெண்கள், 3 குழந்தை கள், ஒரு ஆண் என 9 பேர் பலி யாகினர்.

மேலும், ஒரு சிறுமியைக் காண வில்லை என கூறியதைத் தொடர்ந்து, நேற்று மீனவர்கள், தீய ணைப்பு படையினர், போலீஸார் படகுகளில் சென்று கடலில் தேடினர். இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான `ஆதேஷ்’ என்ற கப்பலும், சிறிய விமானமும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. காலை 10 மணியளவில் 12 வயது சிறுமியின் சடலம் கரை ஒதுங்கி யதையடுத்து தேடுதல் பணி நிறுத் தப்பட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

ஓட்டுநர் செல்வம் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த நிலை யில் படகு உரிமையாளர் கெவினை போலீஸார் நேற்று கைது செய்தனர். 10 பேரின் சடலங் களும் உறவினர்களிடம் ஒப்படைக் கப் பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in