சேலம் திருநங்கை பிரித்திகா யாஷினி: தருமபுரியில் காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்பு

சேலம் திருநங்கை பிரித்திகா யாஷினி: தருமபுரியில் காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்பு
Updated on
1 min read

சேலம் கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கலை யரசன். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதியரின் 2 வாரிசுகளில் பிரித்திகா யாஷினி(26) திரு நங்கை ஆவார். பிசிஏ பட்டம் முடித்துள்ள இவர் கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்று தேர்வானார்.

காவல் உதவி ஆய்வாளருக் கான ஓராண்டு பயிற்சியை முடித்த பிரித்திகா யாஷினி உள்ளிட்ட 108 பேருக்கு தற்போது காவல் நிலைய பணி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அதில், தருமபுரி மாவட்டத்தில் 15 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் பிரித்திகா யாஷினியும் ஒருவர்.

இவர் நேற்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கங்கா தரை சந்தித்து பணியில் இணைந்த துடன், வாழ்த்து பெற்றார். அவர் உள்ளிட்ட 15 பேரும் எந்தெந்த காவல் நிலையத்தில் பணியாற்று வது என்பது குறித்த உத்தரவு இன்று வழங்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 6 மாதங்கள் காவல் நிலைய பயிற்சிப் பணி முடித்த பிறகு இந்த புதிய உதவி ஆய்வாளர் கள் மீண்டும் வேறு காவல் நிலை யங்களில் பணியமர்த்தப்படுவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in