நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 21-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு

நாகை கடற்கரையில் நேற்று நடைபெற்ற 21-ம் ஆண்டு சுனாமி நினைவு தின நிகழ்ச்சியில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.யான செல்வராஜ், திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் உள்ளிட்டோர்.

நாகை கடற்கரையில் நேற்று நடைபெற்ற 21-ம் ஆண்டு சுனாமி நினைவு தின நிகழ்ச்சியில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.யான செல்வராஜ், திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

நாகப்பட்டினம் / மயிலாடுதுறை: ​நாகை, மயி​லாடு​துறை மாவட்ட கடற்​கரையோர பகு​தி​களில் 21-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. 2004-ம் ஆண்டு டிச. 26-ம் தேதி ஏற்​பட்ட சுனாமி பேரலை​யில் தமிழகத்​தில் 10 ஆயிரத்​துக்​கும் அதி​க​மானோர் உயி​ரிழந்​தனர்.

குறிப்​பாக, நாகை மற்​றும் வேளாங்​கண்ணி பகு​தி​களில் மட்​டும் 6,065 பேர் உயி​ரிழந்​தனர். அந்த மறக்க முடி​யாத வடு​வாகிப் போன சுனாமி தாக்கி நேற்​றுடன் 21 ஆண்​டு​கள் நிறைவடைந்து விட்​டது.

21-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்​னிட்​டு, நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி பேராலய அதிபர் இருதய​ராஜ் தலை​மை​யில் மீனவர்​கள், வணி​கர்​கள், பொது​மக்​கள், அருட் ​தந்​தைகள், அருட்​சகோ​தரி​கள் உள்​ளிட்​டோர் அமை​திப் பேரணி​யாக 3 கி.மீ. தொலைவு சென்​று, அங்​குள்ள நினைவு ஸ்தூபி​யில் மலர்​கள் தூவி, மெழுகு​வத்தி ஏந்தி அஞ்​சலி செலுத்​தினர்.

இதே​போல, நாகை மாவட்​டத்​தில் உள்ள 25 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்​கள் நேற்று கடலுக்​குச் செல்​லாமல், அந்​தந்த மீனவக் கிராமங்​களில் உள்ள நினைவு ஸ்தூபிகளில் அமை​திப் பேரணி சென்று மலர் வளை​யம் வைத்து மவுன அஞ்சலி செலுத்​தினர்.

நாகை கடற்​கரை​யில் எம்​.பி.செல்​வ​ராஜ், திமுக மாவட்​டச் செய​லா​ளர் கவுதமன், முன்​னாள் அமைச்​சர் மதி​வாணன், வேளாங்​கண்​ணி​யில் அதி​முக சார்​பில் முன்​னாள் அமைச்​சர்​கள் ஓ.எஸ்​.மணி​யன், ஜெய​பால், ஜீவானந்​தம் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சி​யினரும் அஞ்​சலி செலுத்​தினர்.

மயி​லாடு​துறை மாவட்​டத்​தில் உள்ள தரங்​கம்​பாடி, பூம்​பு​கார், திரு​முல்​லை​வாசல், பழை​யாறு, வானகிரி உள்​ளிட்ட 28 மீனவக் கிராமங்​களி​லும் சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது.

தரங்​கம்​பாடி பழைய ரயிலடி அருகே சுனாமி​யால் உயி​ரிழந்த 319 பேர்​அடக்​கம் செய்​யப்​பட்ட இடத்​தில் ஏராள​மானோர் மலர் வளை​யம் வைத்து அஞ்​சலி செலுத்​தினர். இதே​போல, காரைக்​கால் கடற்​கரை​யில் சுனாமி​யால் உயி​ரிழந்​தவர்​களுக்​காக அமைக்​கப்​பட்​டுள்ள நினை​விடத்​தில் அஞ்சலி செலுத்​தும் நிகழ்வு நேற்று நடைபெற்​றது.

<div class="paragraphs"><p>நாகை கடற்கரையில் நேற்று நடைபெற்ற 21-ம் ஆண்டு சுனாமி நினைவு தின நிகழ்ச்சியில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.யான செல்வராஜ், திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் உள்ளிட்டோர்.</p></div>
கோவை, நீலகிரியில் பறவை காய்ச்சல் பீதி: எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in