வாகன பதிவுக்கு இனி ஆதார், பான் அட்டை கட்டாயம்: விபத்து ஏற்படுத்துவோரை எளிதில் கண்டுபிடிக்கலாம்

வாகன பதிவுக்கு இனி ஆதார், பான் அட்டை கட்டாயம்: விபத்து ஏற்படுத்துவோரை எளிதில் கண்டுபிடிக்கலாம்
Updated on
1 min read

புதிய வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) பதிவு செய்ய இனி ஆதார், பான் அட்டை ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 63 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓக்கள்) உள்ளன. இதுதவிர 60-க்கும் மேற்பட்ட யூனிட் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். சராசரியாக 6,000 பேர் புதிய வாகனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக அரசு உத்தரவு

வாகனங்களுக்கு பதிவு எண் வழங்குதல், ஆட்டோ உரிமை யாளர்களின் பெயர் மாற்றம் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. போலி ஓட்டுநர் உரிமங்களை ஒழிக்க வேண்டுமென்ற நோக் கத்தில் மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகம் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே, புதிய வாகனங்கள் பதிவின் போது ஆதார், பான் ஆகிய எண்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விரைவில் கண்டுபிடிக்கலாம்

இது தொடர்பாக போக்கு வரத்து ஆணையரக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘புதிய வாகனங்கள் பதிவு செய்ய ஆதார், பான், செல்போன் எண் ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென தமிழக போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அம லுக்கு வந்துள்ளது. இந்த விவ ரங்கள் வாகன உரிமையாளர்களின் புள்ளிவிவரங்களுடன் இணைக் கப்படும்.

வாகனங்கள் திருட்டை உடனடி யாக கண்டுபிடிக்க உதவும். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்வோரையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதேபோல், ஓட்டுநர் உரிமம் பெற ஆதார் அட்டையை முகவரி சான்றுக்கு கொடுக்க அனு மதிக்கலாம். ஓட்டுநர் உரிமம் வழங்கும்போது சம்பந்தப் பட்டவரின் ரத்தப் பிரிவு கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

வாகனங்கள் திருட்டை உடனடியாக கண்டுபிடிக்க உதவும். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்வோரையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதேபோல், ஓட்டுநர் உரிமம் பெற ஆதார் அட்டையை முகவரி சான்றுக்கு கொடுக்க அனுமதிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in