Published : 11 Jun 2016 10:54 AM
Last Updated : 11 Jun 2016 10:54 AM

சாயல்குடி அருகே 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை: வரலாற்றை வெளிக்கொணர அகழாய்வு செய்ய கோரிக்கை

சாயல்குடி அருகே 2,000 ஆண்டு களுக்கு முந்தைய இரும்பு உருக் காலையை தொல்லியல் துறையி னர் அகழாய்வு செய்து வரலாற்றை வெளிக்கொணர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாயல்குடியில் இருந்து சூரங்குடி செல்லும் பழைய மங்கம்மாள் சாலையில் தரைக்குடி அருகில் உள்ளது கொக்கரசன்கோட்டை. இந்த ஊரில் பச்சைத் தண்ணீர்க் காரி என்ற மாலைக்காரி அம்மன் கோயில் பல்லாங்குறிச்சி கண் மாய்க் கரையில் அமைந்துள்ளது.

இங்கு ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு, ஒருங்கி ணைப்பாளர்கள் ஜெயசீலன், அற் புத ராஜ் ஆகியோர் மேற்பரப்பாய்வு செய்தனர். அப்போது 2,000 ஆண்டு கள் பழமையான சங்க காலத்தைச் சேர்ந்த சுடுமண்ணால் செய்யப்பட்ட இரும்பு உருக்காலையின் உடைந்த பகுதிகள், இரும்பு தாது, கழிவுப் பொருட்கள், கருப்பு, சிவப்பு, பழுப்பு நிற பானை ஓடுகள், குறியீடு உள்ள பானை ஓடு, சுடுமண்ணால் செய்யப்பட்ட தாய்த் தெய்வ உருவப் பொம்மை, கெண்டியின் நீர் ஊற்றும் மூக்குப்பகுதி ஆகிய வற்றை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து வே.ராஜகுரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கி.மு.1000 முதல் கி.மு.300 வரை யிலான பெருங்கற்காலத்தில்தான் மனிதன் இரும்பைக் கண்டுபிடித் தான். இதனால் இந்த பெருங் கற்காலத்தை இரும்புக்காலம் எனவும் அழைப்பார்கள். கொக்கர சன்கோட்டையில் இரும்பு தாதுப் பொருட்கள், இரும்புக் கழிவுகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட இரும்பு உருக்கு ஆலையின் உடைந்த பகுதிகள் கிடைத்துள்ளதால் இங்கு இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்திருப்பது உறுதியாகிறது. அக்காலத்து மக்கள் இரும்பு தாதுப் பொருட்களை உருக்காலைகள் மூலம் உருக்கி, அதில் இருந்து கத்தி, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங் களை உருவாக்கி உள்ளனர்.

இரும்புத் தாது இப்பகுதியில் அதிக அளவில் கிடைத்திருக்கலாம். மேலும் சங்ககாலப் பானை ஓடுகள் என அழைக்கப்படும் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் இங்கு கிடைப்பதால் இரும்பு உருக்காலை சங்க காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

இரும்பை தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தி ருக்கிறார்கள். சங்க காலத்தில் இரும்புத் தொழில் சிறப்புற்று இருந்ததை அகநானூறு, புற நானூறு, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை தெரிவிக்கின்றன. இரும் புத் தாதுவில் இருந்து இரும்பை உருக்கி எடுக்கும் சுடுமண்ணால் செய்யப்பட்ட உலைக்களங்கள் நிலத்துக்கு மேல் உருவாக்கப்பட்டி ருக்கும். அத்தகைய இரும்பு உருக்கு ஆலையின் பகுதிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைப்பது இதுவே முதல்முறை.

தடித்த கருப்பு, சிவப்பு பானை ஓடு ஒன்றின் விளிம்புப் பகுதியில் தாமரைப்பூ போன்ற குறியீடு காணப்படுகிறது. மட்கலயங்களை வாங்கி பயன்படுத்தியவர்கள் தங்க ளது உடைமை எனக் குறிக்க குறி இடுவது உண்டு. இவற்றை உடைமைக் குறி என்பர். தற் காலத்திலும் பாத்திரங்களில் பெயர் பொறிக்கும் வழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலை உடைந்த நிலையில் உள்ள சுடுமண்ணால் செய்யப்பட்ட அரைவட்ட வடிவத்தில் சிறிய அளவி லான பெண் உருவம் இங்கு கிடைத்துள்ளது. இது தாய் தெய்வ மாக இருக்கலாம். இவ்வுருவம் மேலாடையின்றி இடுப்பில் ஆடை அணிந்து கையை விரித்து அமர்ந்த நிலையில் உள்ளது. இத்தகைய சுடுமண் சிற்பங்கள் வீட்டு வழி பாட்டுக்கு பயன்படுத்தப்பட் டவையாக இருக்கலாம்.

சுடுமண்ணால் செய்யப்பட்ட கெண்டியின் நீர் ஊற்றும் மூக்குப் பகுதி இங்கு கிடைத்துள்ளது. இதன் தலைப்பகுதியில் தாமரை இதழ் போன்ற அமைப்புடன் நடுவில் துவாரமும் உள்ளது. இதை தயாரித்து சுடுவதற்கு முன் பானை அல்லது குடுவையின் உடல் பகுதியில் பொருத்தியுள்ளனர்.

பாண்டியர் ஆட்சிக்காலத்தில் அளற்று நாடு என அழைக்கப்பட்ட பகுதியில் இவ்வூர் இருந்துள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திருமாலுகந்தான் கோட்டை யில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செஞ்சடைநாத ஈசுவரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 21 கல்வெட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தால் இவ்வூரின் வரலாற்றை முழுமையாக வெளிக்கொணரலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x