சேலம் எஸ்.பி.-க்கு தி.மு.க. வக்கீல் நோட்டீஸ்

சேலம் எஸ்.பி.-க்கு தி.மு.க. வக்கீல் நோட்டீஸ்
Updated on
1 min read

ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய ஆளுங்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து சேலம் எஸ்.பி.-க்கும், வாழப்பாடி இன்ஸ்பெக்டருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தி.மு.க.

திமுக மாவட்ட கிளை செயலர் எஸ்.ஆர். சிவலிங்கம் சார்பில், வக்கீல் பரந்தாமன், சேலம் எஸ்.பி.-க்கும், வாழப்பாடி இன்ஸ்பெக்டருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அக்டோபர் 30-ஆம் தேதி கொடுக்கப்பட்ட புகாரின் மீது இதுவரை எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறும் ஆளுங்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகப்போவதாக வக்கீல் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in