சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பேற்றார்

சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பேற்றார்
Updated on
1 min read

சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பேற்றார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்ததை அடுத்து, அவர் இன்று (திங்கள்) பணியில் இணைந்தார்.

தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகர கமிஷனராக இருந்தவர் ஏ.கே.விஸ்வநாதன். ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஏடிஜிபியாகவும் பதவி வகித்தவர். அதற்குப் பிறகு ஊர்க்காவல் படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டவர் தற்போது சென்னை பெருநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல் துணை ஆணையராக சாம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த கரண் சின்ஹா, சீருடை பணியாளர் தேர்வு வாரிய கூடுதல் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in