கடந்த 5 ஆண்டுகளில் 21லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.580 கோடி உதவித்தொகை: அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் 21லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.580 கோடி உதவித்தொகை: அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்
Updated on
1 min read

கடந்த 5 ஆண்டுகளில் நல வாரியங்கள் மூலம் 21.75 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.580 கோடி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக தொழி லாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் நலவாரி யத்தின் செயல்பாடுகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இழப்பீடு, பணிக்கொடை, பிழைப்பூதியம் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு பணிப் பலன்களை அளிக்கும் சட்டங்க ளின்கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது முக்கியத்துவம் அளித்து உரிய காலத்தில் உத்தரவுகள் வழங்கப்படும். நுகர்வோர் நலன்களை பாது காக்கும் வகையில், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும். பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விநியோகம் சரியான அளவில் இருப்பதை அலுவலர்கள் கண்காணிப்பர்.

தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 17 அமைப்பு சாரா நலவாரியங்களில் பதிவு புதுப்பித்தல், நல உதவி கோரும் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு உரிய காலத்தில் உதவித்தொகைகள் வழங்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் 15 லட்சத்து 32 ஆயிரத்து 958 உறுப்பினர்கள் புதியதாக பதிவு செய்துள்ளனர். 21 லட்சத்து 74 ஆயிரத்து 982 பயனாளிகளுக்கு ரூ.580 கோடி அளவுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலர் பெ.அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in