Published : 28 Jul 2016 09:49 AM
Last Updated : 28 Jul 2016 09:49 AM

முதுகலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்: அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை அறிவிப்பு

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாடு முழுவதும் பள்ளிக் கல்வி யின் தரத்தை உயர்த்தும் வகையில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை அசோசியேட்ஸ் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இந்தப் பணிக்கு முதுகலை பட்ட தாரிகள் (எம்ஏ, எம்எஸ்சி) விண்ணப் பிக்கலாம். பிளஸ் 2 முடித்தவுடன் நேரடியாக ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலை படிப்பு படித்தவர்களும் விண்ணப் பிக்கத் தகுதியுடையவர் ஆவர். கடந்த 2015 அல்லது 2016-ம் ஆண்டு படித்து முடித்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். மேலும், தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் புதுச்சேரியில் பணிசெய்ய தயாரானவர்களாகவும் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு சென்னை, கோவை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் ஜூலை 30-ம் தேதி காலை 9 மணி, 11 மணி மற்றும் மதியம் 1 மணிக்கு நடைபெறும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.26 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். அதோடு கூடுதல் சலுகைகளும் உண்டு. விண்ணப்பங்களை campus@azimpremjifoundation.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை www.azimpremjifoundation.org/campus என்ற இணை யதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x