

பெப்ஸி, கோக் குளிர்பான நிறு வனங்களுக்கு தாமிரபரணியி லிருந்து தண்ணீர் எடுக்க விதிக் கப்பட்டிருந்த தடையை நீக்கியது டன் இதுதொடர்பான 2 பொது நலன் வழக்குகளையும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித் துள்ளது. மேற்கண்ட குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்திக் கொள்ள லாம் என்ற தீர்ப்பு தென்மாவட்ட மக்கள் மத்தியில் கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.
குளிர்பான ஆலைகளுக்கு எதிராக பல ஆண்டுகளுக்கு முன்பே கருத்தரங்குகள் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தியவர் திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
ஒரு வர்த்தக நிறுவனத்துக்கு 1000 லிட்டர் தண்ணீர் ரூ.37.50 என்ற விலைக்கு அரசே வழங்க ஒப்பந்தம் போட்டிருப்பதையும், அதை நீதிமன்றம் சரி என்று ஏற்றுக் கொண்டிருப்பதையும் எப்படி பார்க்கிறீர்கள்?
தாமிரபரணியில் ஓடும் உபரி நீரை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக அறிகிறேன். இந்தியாவின் நீராதார துறை (Central Water Commission) அறிக்கைப்படி, பிரம்மபுத்திராவில் மட்டும் சிறிது உபரிநீர் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தியாவில் ஓடும் எந்த நதியிலும் உபரிநீர் இல்லை. தாமிரபரணி ஆற்றில் நீர்மானிகளே(Water guage) கிடையாது. எந்த இடத்தில் ஓடும் நீரை உபரி நீர் என்கிறார்கள். அப்படியே உபரி நீர் இருந்தாலும், அதை எப்படி ஒரு தனியார் நிறுவ னம் எடுக்க முடியும்? தண்ணீர் என்பது ஒரு அடிப்படை வளம். அது விற்பனை பண்டம் அல்ல. அங்குள்ள மக்களுக்கு விவசாயத் துக்கு தண்ணீர் இல்லை. குடிக் கவே தண்ணீர் இல்லை. அங்கு சாக்கடைதான் ஓடுகிறது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்க முடியாது. தண்ணீர் பிரச்சினையில் சட்டப் பார்வை மட்டு மின்றி, சமூக பார்வையுடன் நீதி மன்றம் அணுகியிருக்க வேண்டும்.
பெப்ஸி, கோக் நிறுவனங்களுக்கு எதிராக மட்டுமே வியாபார தடை உள்ளிட்ட பிரச்சினைகள் கிளப்பப் படுவதாக புகார் கூறுகின்றனரே?
காளிமார்க், பொவன்டோ உள்ளிட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவாக வெளிநாட்டு நிறுவனங் களான பெப்ஸி, கோக் ஆகிய வற்றை தடை செய்ய முயற்சி எடுப்பதாக வாதிடப்படுகிறது. நான் அதற்குள் செல்ல விரும்ப வில்லை. இப்போது வெளி வந்துள்ள தீர்ப்பு தாமிரபரணி தண்ணீர் பிரச்சினைதான். மற்ற நிறுவனங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை.
ஒரு பொருளுக்கு தடை விதிக்க வேண்டுமென்றால், அரசு அல்லது நீதிமன்றம்தான் தடை விதிக்க வேண்டும். மக்களே சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்ற எதிர்த்தரப்பு வாதம் குறித்து உங்கள் கருத்து?
கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம் என்று அறிவித்திருப்பது வியாபாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு. தாமிரபரணி தண்ணீரை எடுக்க அனுமதி அளித்திருப்பது தவறு என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை.