மீன்பிடி தடை காலம் ஏப்.15-ல் தொடக்கம்: 45 நாட்கள் கடலுக்குள் செல்ல முடியாது

மீன்பிடி தடை காலம் ஏப்.15-ல் தொடக்கம்: 45 நாட்கள் கடலுக்குள் செல்ல முடியாது
Updated on
1 min read

தமிழகத்தில் 45 நாள் மீன்பிடி தடைக் காலம் வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் வங்காள விரி குடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடல் பகுதி களில் ஏப்ரல், மே மாதங்களை மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரி னங்களின் இனப்பெருக்கக் கால மாக மத்திய வேளாண் அமைச்ச கம் கண்டறிந்துள்ளது. இந்த கால கட்டத்தில் மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்தில் விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிக்கத் தடை விதிக் கப்படுவது வழக்கம்.

இது குறித்து ராமேசுவரம் மீன் வளத் துறை அதிகாரிகள் கூறிய தாவது: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், தமிழகத்தின் கடல் பகுதி யில் மீன் இனப் பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் வகையிலும் வரும் 15 முதல் மே 29-ம் தேதி வரை அதாவது 45 நாட்களுக்கு விசைப் படகு கள், இழுவைப் படகுகள் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப் படுகிறது. அதன்படி இக்குறிப் பிட்ட காலங்களில் கன்னியாகுமரி யில் இருந்து பழவேற்காடு வரை உள்ள 13 மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது எனத் தெரிவித்தனர்.

இந்தத் தடைக் காலத்தில் ராம நாதபுரம் மாவட்டத்தில் ராமேசு வரம், பாம்பன், மண்டபம், தொண்டி, எஸ்.பி.பட்டினம், கீழக் கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் ஆகிய கடலோரப் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீ்ன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படும். அப்போது மீனவர் கள் தங்கள் படகுகளை சீரமைக் கும் பணியை மேற்கொள்வர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in