ஆட்டோவில் பயணி தவறவிட்ட 40 பவுன் நகை: தகவல் தெரிவிக்காத ஓட்டுநர் கைது

ஆட்டோவில் பயணி தவறவிட்ட 40 பவுன் நகை: தகவல் தெரிவிக்காத ஓட்டுநர் கைது
Updated on
1 min read

புதுவண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட 40 பவுன் நகை பையை அபகரிக்கும் நோக்கில் செயல் பட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

சென்னை நங்கநல்லூர் எஸ்.பி. காலனியைச் சேர்ந்தவர் தனபாலன். இவர் தனது மனைவி யுடன் கடந்த 4-ம் தேதி ஒரு திருமண விழாவில் கலந்துகொள்வதற் காக நங்கநல்லூரில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வந்தார். பின்னர் புதுவண்ணாரப் பேட்டைக்கு ஒரு ஆட்டோவில் சென்றார். தாம் கொண்டுவந்த 40 பவுன் நகைகள் அடங்கிய பையை தனபாலன் ஆட்டோ விலேயே தவற விட்டுவிட்டு திருமண மண்டபம் வந்ததும் இறங்கி சென்றுவிட்டார். தான் எந்த ஆட்டோவில் பயணம் செய்தோம் என்று தனபாலுக்கு தெரியவில்லை.

நகைப் பையை தவறவிட்டது குறித்து தனபாலன் வண் ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் ஜெயக்குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் அசோக் விசாரணை நடத்தினார். திருமண மண்டபத்தின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தனபாலன் ஒரு ஆட்டோவில் வந்து இறங்குவது தெரிந்தது.

அந்த ஆட்டோவின் பதிவு எண்ணை கண்டுபிடித்து நடத்திய விசாரணையில் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 5-வது தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி என்பது தெரியவந்தது. அவர் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 40 பவுன் நகையை போலீஸார் மீட்டனர். வேலுச்சாமியை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in