ஆளுநர் உரை: வைகோ வரவேற்பு

ஆளுநர் உரை: வைகோ வரவேற்பு
Updated on
1 min read

ஆளுநர் உரையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்று வதற்கான அறிவிப்பும், மதுரை, தூத்துக்குடியில் தொழில் பூங்கா வுக்கான அடிப்படை கட்டமைப்பு கள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா, நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்ததைப் போல தமிழகத்தில் மீண்டும் குடிமராமத்து திட்டத்தைக் கொண்டுவர வெளியிடப்பட் டுள்ள அறிவிப்பு பாராட்டத் தக்கது. இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in