கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலை: அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலை: அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு களில் 5 லட்சம் பேருக்குமேல் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் காஞ் சிபுரம் எழிலரசன், ‘‘தமிழகத்தில் 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர்’’ என கூறினார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச் சர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் பொது விளம்பரங்கள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின் றனர். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், கிராம நிர்வாக அலுவலர்கள் 8,509 பேர், குரூப் 4 தேர்வு மூலம் 15,481 பேர், குரூப் 1 மூலம் 131 பேர், குரூப் 2 மூலம் 1,207 பேர் என பல்வேறு பணிகளுக்காக 58,190 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் பதி லளிக்கையில், ‘‘வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள 85 லட்சம் பேரில், 60 சதவீதம் பேர் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள். அவர்கள் தற்போது உயர்கல்வி படித்து வருகின்றனர். கடந்த 2011- 16 வரை, வேலைவாய்ப்பு அலு வலகம் மூலம் 86,696, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 56,328, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 32,997, தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் 1 லட் சத்து 42 ஆயிரத்து 114 பேர் உட்பட மொத்தம் 5,01,874 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் 15 மாவட்டங்களில் நடத்தப்பட்டது. இதில் 3,330 நிறுவனங்கள் பங்கேற்றன. 4 லட்சத்து 47 ஆயிரத்து 496 பேர் முகாமில் பங்கேற்றத்தில், 59,232 பேர் பணி வாய்ப்பு பெற்றனர். மேலும் 53,440 மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படுகிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in