பொறியியல் பொது கலந்தாய்வு: 15 நாளில் 47,623 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை

பொறியியல் பொது கலந்தாய்வு: 15 நாளில் 47,623 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை
Updated on
1 min read

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் பொறியியல் பொது கலந்தாய்வில் இதுவரை 47 ஆயிரத்து 623 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஜுன் மாதம் 27-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 15-வது நாளான நேற்றைய கலந்தாய்வுக்கு 6,192 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், அவர்களில் 2,306 பேர் கலந்தாய்வுக்கே வரவில்லை. கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரியை தேர்வு செய்த 3,864 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. கடந்த 15 நாட்களில் 47 ஆயிரத்து 623 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ஜெ.இந்துமதி தெரிவித்தார்.

இதுவரையில் 21 ஆயிரத்து 596 பேர் கலந்தாய்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 16-ம் நாளான இன்றைய (புதன்கிழமை) கலந்தாய்வுக்கு 150.25 முதல் 145.75 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in