

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்ஜிஆர் பல் கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகினர்.
வாக்காளர்களுக்கு பண விநியோகம்
சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற இருந் ததையொட்டி வாக்காளர்களுக்கு சிலர் பணம் விநியோகம் செய்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து நடத்திய விசாரணையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை தெரி வித்துள்ளனர். அதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி, சமக தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா அலுவலகங்கள், அதிமுக முன்னாள் எம்பி சிட்லப் பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத் தினர்.
மேலும் விசாரணை
எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமியிடம் 12-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மேலும் விசாரணை நடத்த வருமாறு கீதா லட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று மாலை 2.40 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்துக்கு கீதா லட்சுமி நேரில் வந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ஒருவர் நேற்று சில ஆவணங்களுடன் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்து, அதை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. மாலையில் வருமானவரித்துறை அலுவலகத் தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.