பிசிசிஐ தலைவராக சீனிவாசன் மீண்டும் தேர்வு

பிசிசிஐ தலைவராக சீனிவாசன் மீண்டும் தேர்வு
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக சீனிவாசன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. மூன்றாவது ஆண்டாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள சீனிவாசன், உடனடியாக பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்க முடியாது. பீகார் கிரிக்கெட் அமைப்பின் செயலாளர் ஆதித்யா வர்மாவின் வழக்கு மற்றும் ஜெகன் ரெட்டி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை சீனிவாசன் தனது பொறுப்புகளில் இருந்து விடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ பொதுக் கூட்டத்தில், ராஜீவ் சுக்லா, எஸ்.கே. பன்சால், ரவி சவந்த், ஷிவ்லால் யாதவ், சஞ்சய் படேல் செய‌லாளராகவும், அனுராக் தாக்கூர் துணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in