

கச்சத்தீவு அருகே மீன் பிடித் துக் கொண்டு இருந்த பாம்பன் நாட் டுப் படகு மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள் ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம் பனில் இருந்து வெள்ளிக்கிழமை 50-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்த போது ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீன வர்களின் நாட்டுப் படகில் இறங்கி எல்லை தாண்டி வந்ததாகக் கூறி வலையை சேதப்படுத்தி கடலில் வீசி பின்னர் விரட்டிய டித்தாக நேற்று கரை திரும்பிய மீனவர்கள் செய்தியாளர்களிடம் பாம்பனில் தெரிவித்தனர்.
இதுவரை, விசைப்படகு மீன வர்களை தாக்கி வந்த, இலங்கை கடற்படையினர், தற்போது, நாட் டுப்படகு மீனவர்களை தாக்கி யது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.